search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்த வாலிபர் போக்‌சோவில் கைது

    சேலம் தாதகாப்பட்டியில் கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 31), இவர் அந்த பகுதியை சேர்ந்த விதவை பெண்ணுடன் தொடர்பில் இருந்தார்.

    அப்போது அந்த பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த 17 வயது சிறுமியையும் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் உறவினர் ஒருவர் அவரை கோவையில் உள்ள தனியார் மில்லில் வேலைக்கு சேர்த்து விட்டார்.

    இதனை அறிந்த மணிமாறன் அங்கு சென்று சிறுமியின் உறவினரிடம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வாலிபர் மணிமாறனை போக்‌சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    Next Story
    ×