search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுப்பிரமணியன்.
    X
    சுப்பிரமணியன்.

    கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து-விவசாயி பலி

    கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் பலியானார்.
    கயத்தாறு:

     கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சி வடக்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45),  விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று கோவில்பட்டிக்கு சென்றார். பின்னர் மீண்டும் அவர் இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பினார்.

    அவர் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் நாற்கரசாலையில் வந்தபோது  இவரது மோட்டார் சைக்கிளும், நெல்லை கருப்பன்துறையை சேர்ந்த  பிலிப் (42)  என்பவர்   சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியனை மீட்டு நெல்லை அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

     இது தொடர்பாக கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறார். உயிரிழந்த சுப்பிரமணியனுக்கு வசந்தி என்ற மனைவியும், காயத்ரி  என்ற மகளும்  உள்ளனர்.
    Next Story
    ×