என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை
Byமாலை மலர்1 May 2022 7:04 AM GMT (Updated: 1 May 2022 7:04 AM GMT)
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை என்பதால் நேற்றே தமிழகத்தில் அதிகளவு மது விற்பனையாகியுள்ளது.
சென்னை,:
தமிழகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றே மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் அதிக அளவில் கூடினர். மதுபான கடைகளில் இருந்து மதுப்பிரியர்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த மது பிரியர்கள் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பைகளில் எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கும், அடுத்து சென்னை மண்டலத்தில் ரூ. 52.28 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 48.67 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்...திருவான்மியூரில் 2 வாலிபர்கள் கொலை- கொலையாளி போலீசில் சரண்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X