என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
Byமாலை மலர்30 April 2022 9:35 AM GMT (Updated: 30 April 2022 9:35 AM GMT)
நெல்லை அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள தெற்குபட்டி கிருஷ்ண ன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி சுப்புலெட்சுமி(வயது 52).
இவர் நேற்று மானூருக்கு சென்றுவிட்டு தெற்குபட்டிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். தெற்குபட்டியில் உள்ள இசக்கியம்மன்கோவில் அருகே சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தின் காரணமாக ஆட்டோவை டிரைவர் மெதுவாக ஓட்டி சென்றுள்ளார்.
ஆனால் தனது தெரு வந்துவிட்டதாக நினைத்த சுப்புலெட்சுமி இறங்க முயன்றுள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்து அவர் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X