search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கார் மோதி வாலிபர் பலி

    செங்கிப்பட்டி அருகே கார் மோதியதில் வாலிபர் பலியானார்.
    தஞ்சாவூர்:

    திருச்சி கீழஅம்பிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 43). இவர் அப்பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். 

    இந்நிலையில் நேற்று விஜயராமன்அவரு டைய நண்பர் இருவரும் ஸ்கூட்டரில் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டனர். செங்கி ப்பட்டி அடுத்துள்ள மனையேரிபட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

     படுகாயமடைந்த மற்றொரு வரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×