என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
3 ஆண்டுகளாக காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் ஜெயிலில் அடைப்பு
Byமாலை மலர்29 April 2022 10:01 AM GMT (Updated: 29 April 2022 10:01 AM GMT)
3 ஆண்டுகளாக காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்த 2 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவுக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் சூலூர் பகுதியில் உள்ள பூங்காவுக்கு காரில் வந்தார்.
அங்கு அவர் காரை நிறுத்தி விட்டு தனது காதலியுடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் சீருடை அணிந்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, நேராக 2 பேரும், காதல் ஜோடிகளை நோக்கி வந்தனர். பின்னர் காதல் ஜோடியிடம் சென்று நீங்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரித்தனர்.
மேலும் காதல் ஜோடிகளிடம் ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். அப்படி பணம் தரவில்லை என்றால், உங்களை போனில் படம் எடுத்து வைத்துள்ளோம். இதனை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காண்பித்து விடுவோம்.
மேலும் காரில் விபசாரம் செய்ததாக கூறி புகார் அளித்து கைது செய்து விடுவோம் எனவும் காதல் ஜோடிகளை மிரட்டினர். இதனால் காதல் ஜோடிகள் 2 பேரும் பயந்து போயினர்.
பின்னர் தங்களிடம் ரூ.1 லட்சம் பணம் இல்லை ரூ.10 ஆயிரம் மட்டுமே உள்ளது என்று தெரிவித்து, அந்த பணத்தை போலீசாரிடம் கொடுத்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.
இருப்பினும் அந்த வாலிபருக்கு இவர்கள் மீது சந்தேகம் இருந்தது. இதையடுத்து அவர் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி ஆனந்த் ஆரோக்கியராஜிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காதல் ஜோடிகளிடம் பணம் கேட்டு மிரட்டியது, கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும் ராஜராஜன் மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் ஜெகதீஷ் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொண்டு நடத்திய விசாரணையில், ராஜராஜன் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சூலூர் பகுதியில் தனியாக அமர்ந்து பேசும் காதல் ஜோடிகளை இதுபோன்று பணம் கேட்டு மிரட்டியதும், அவருக்கு ஜெகதீசும் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர்களிடம் வேகமாக செல்வதாக கூறியும் பணம் பறித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இது சம்பந்தமான தகவல்களை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
அவர்களது உத்தரவின் பேரில், ஏட்டு ராஜராஜன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை இன்று காலை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. இதற்கான ஆதாரங்களை போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் சமர்பித்துள்ளனர். இன்றே அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவுக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் சூலூர் பகுதியில் உள்ள பூங்காவுக்கு காரில் வந்தார்.
அங்கு அவர் காரை நிறுத்தி விட்டு தனது காதலியுடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் சீருடை அணிந்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, நேராக 2 பேரும், காதல் ஜோடிகளை நோக்கி வந்தனர். பின்னர் காதல் ஜோடியிடம் சென்று நீங்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரித்தனர்.
மேலும் காதல் ஜோடிகளிடம் ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். அப்படி பணம் தரவில்லை என்றால், உங்களை போனில் படம் எடுத்து வைத்துள்ளோம். இதனை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காண்பித்து விடுவோம்.
மேலும் காரில் விபசாரம் செய்ததாக கூறி புகார் அளித்து கைது செய்து விடுவோம் எனவும் காதல் ஜோடிகளை மிரட்டினர். இதனால் காதல் ஜோடிகள் 2 பேரும் பயந்து போயினர்.
பின்னர் தங்களிடம் ரூ.1 லட்சம் பணம் இல்லை ரூ.10 ஆயிரம் மட்டுமே உள்ளது என்று தெரிவித்து, அந்த பணத்தை போலீசாரிடம் கொடுத்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.
இருப்பினும் அந்த வாலிபருக்கு இவர்கள் மீது சந்தேகம் இருந்தது. இதையடுத்து அவர் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி ஆனந்த் ஆரோக்கியராஜிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காதல் ஜோடிகளிடம் பணம் கேட்டு மிரட்டியது, கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும் ராஜராஜன் மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் ஜெகதீஷ் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொண்டு நடத்திய விசாரணையில், ராஜராஜன் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சூலூர் பகுதியில் தனியாக அமர்ந்து பேசும் காதல் ஜோடிகளை இதுபோன்று பணம் கேட்டு மிரட்டியதும், அவருக்கு ஜெகதீசும் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர்களிடம் வேகமாக செல்வதாக கூறியும் பணம் பறித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இது சம்பந்தமான தகவல்களை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
அவர்களது உத்தரவின் பேரில், ஏட்டு ராஜராஜன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை இன்று காலை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. இதற்கான ஆதாரங்களை போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் சமர்பித்துள்ளனர். இன்றே அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X