search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரநாதர் கோவிலில் பிரதோச வழிபாடு நடைபெற்ற காட்சி.
    X
    குலசேகரநாதர் கோவிலில் பிரதோச வழிபாடு நடைபெற்ற காட்சி.

    செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோச வழிபாடு

    செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோச வழிபாடு நடைபெற்றது.
    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகர நதார் கோவிலில் சித்திரை மாதம் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.

    ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களில் உள்ள சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    அன்று மாலையில் சுவாமி, அம்பாள், நந்திக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்படும்.

    பின் சுவாமி, அம்பாள், சிறப்பு அபிஷேகம், அலங்காரம்நடக்கும்.அதனைத்தொடர்ந்து சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபடுவர்.

    இதனை காண மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர்.

    இதனை போன்று செங்கோட்டை  இலத்தூர், புளியரை, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரதோச வாழிபாடு நடைபெற்றது.
    Next Story
    ×