search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

    இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
    கரூர் :

    கரூர் மாவட்டம் பெரிய ஆண்டான்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் சுரேஷ்(வயது28). இவர் சம்பவத்தன்று வாங்கல் அருகே தனது இருசக்கர வாகனத்தில் கால்நடை மருத்துவமனை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்த சுரேஷ் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வாங்கல் போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×