search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகளுக்கு இனிப்பு வழங்கிய சசிகலா.
    X
    பள்ளி மாணவிகளுக்கு இனிப்பு வழங்கிய சசிகலா.

    மாணவிகளுக்கு இனிப்பு வழங்கிய சசிகலா

    பாபநாசத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவிகளுக்கு சசிகலா இனிப்பு வழங்கினார்.
    பாபநாசம்:

    திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக சசிகலா நேற்று மாலை தஞ்சையில் இருந்து புறப்பட்டு சாலியமங்கலம் வழியாக பாபநாசம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பாபநாசம் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் புனித செபஸ்தியார் நடுநிலைப் பள்ளி மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சாலை ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். 

    அப்போது பள்ளி மாணவிகளை பார்த்த சசிகலா காரை நிறுத்தி இரண்டு இடங்களில் மாணவ -மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி நன்கு படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று வாழ்த்தி அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×