search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பிளஸ்-2 செய்முறை தேர்வில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

    பிளஸ்-2 செய்முறை தேர்வில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை சுமார் 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்த நிலையில் பிளஸ்-2 செய்முறை  தேர்வு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. 

    செய்முறை தேர்வு 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காலை 8 மணி முதல் 10 மணி வரையும், 10.15 மணி முதல் 12.15 மணி வரையும், 12.45 மணி முதல் 2.45 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்படுகிறது. மாணவ- மாணவிகள் செய்முறை தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்று எழுதி வருகின்றனர். வருகிற 2-ந் தேதியுடன் செய்முறை தேர்வு முடிவுடைகிறது என்று கல்வித்துறை  அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×