search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் அரிசி
    X
    ரேஷன் அரிசி

    ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 2 டன் ரேசன் அரிசி-கோதுமை பறிமுதல்

    கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 2 டன் ரேசன் அரிசி, கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசார் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேசன் அரிசி மற்றும் 500 கிலோ கோதுமை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து லாரியில் இருந்த கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ராஜாவை கைது செய்தனர். ரேஷன் அரிசி, கோதுமையுடன் மினி லாரியை பறிமுதல் செய்து திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஆந்திராவுக்கு ரேசன் அரிசி, கோதுமையை கடத்தி செல்வது தெரிய வந்தது. அவருக்கு ரேசன் அரிசி, கோதுமை எப்படி கிடைத்தது. ரேசன் கடை ஊழியர்கள் உடந்தையா? என்பது குறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×