search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுதல் கூறிய சசிகலா
    X
    ஆறுதல் கூறிய சசிகலா

    தஞ்சை தேர் விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு சசிகலா நேரில் ஆறுதல்

    தஞ்சை தேர் திருவிழாவில் மின்கம்பி உரசியதில் 11 பேர் பலியான சம்பவத்துக்கு தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
    தஞ்சை:

    தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தேர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    இந்நிலையில், தேர் திருவிழா விபத்து குறித்து அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற சசிகலா களிமேடு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

    Next Story
    ×