search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    திருச்சியில் மூதாட்டி மாயம்

    திருச்சியில் திடீரென மூதாட்டி மாயமானார்.
    திருச்சி கூத்தப்பார் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 76). இந்த மூதாட்டி சமீப காலமாக திருச்சி அண்ணா நகர் பகுதியில் தனது பேரன் குமரேசன் வீட்டில் வசித்து வந்தார்.  

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சீதாலட்சுமி வீட்டில் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான அவர் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

     குமரேசன் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும்  பாட்டியை பற்றிய விபரம் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான மூதாட்டியை தேடி வருகிறார்.    
    Next Story
    ×