search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தூத்துக்குடி தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை

    தூத்துக்குடி தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, செல்போன் கொள்ளை போயின.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காமராஜ்நகரை சேர்ந்தவர் சாமுவேல் ஜெபராஜ் (வயது 48). 

    இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.  
       
    நேற்று மாலை சாமுவேல் ஜெபராஜ் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். 

    இன்று காலை அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது அவர்கள் வீட்டுகதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. 

    இதனால் அதிர்ச்சி-யடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 கிராம் நகை மற்றும் செல்போன் ஆகியவை கொள்ளை போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். 

    இது தொடர்பாக அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். 

    கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×