search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    நொளம்பூர் பகுதியில் லாரிகளில் இருந்த பேட்டரிகளை திருடிய 3 பேர் கைது

    சென்னை நொளம்பூர் பகுதியில் லாரிகளில் இருந்த பேட்டரிகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 6 பேட்டரிகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை நொளம்பூர் அடையாளம்பட்டு பனஞ்சாலை தெருவைச் சேர்ந்த வடிவேல் என்பவர் சொந்தமாக டாரஸ் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். வடிவேல் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் இவருக்கு சொந்தமான டாரஸ் லாரியை நொளம்பூர்  கார்டன் அருகே நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, லாரியிலிருந்த பேட்டரியை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து வடிவேல் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 நபர்கள் லாரியிலிருந்த பேட்டரியை திருடிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு திருட்டில் ஈடுபட்ட விக்னேஷ்,  ராஜேஷ், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.

    விசாரணையில் 3 பேரும் தேவா என்பவருடன் சேர்ந்து நொளம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிறுத்தியிருக்கும் லாரிகளின் பேட்டரிகளை திருடிச் சென்றதும், இதில் தேவா என்பவர் தலைமறைவானதும் தெரியவந்தது.

    அதன்பேரில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து லாரி பேட்டரி உட்பட 6 பேட்டரிகள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள தேவா என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×