என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கம்பம் அருகே ‘அந்த’ உறுப்பை அறுத்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்26 April 2022 9:22 AM GMT (Updated: 26 April 2022 9:22 AM GMT)
கம்பம் அருகே மர்ம உறுப்பை அறுத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் 14வது வார்டு கம்பம் மெட்டு காலனியைச் சேர்ந்த முருகன் மகன் ஈஸ்வரன் (வயது 23). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி வினோதினி என்ற மனைவியும், சிவானி (3) என்ற மகளும் உள்ளனர்.
தற்போது வினோதினி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வினோதினி கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம்.
சம்பவத்தன்று வினோதினி மற்றும் தனது மகள்களை ஈஸ்வரன் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அவருக்கு சாப்பாடு கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் சாப்பிட மறுத்து விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரன் தனது அறைக்கு சென்று மர்ம உறுப்பை அறுத்துக் கொண்டார்.
மேலும் சேலையால் தனது கழுத்தை இறுக்கி மயங்கினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ஈஸ்வரன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அரசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் 14வது வார்டு கம்பம் மெட்டு காலனியைச் சேர்ந்த முருகன் மகன் ஈஸ்வரன் (வயது 23). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி வினோதினி என்ற மனைவியும், சிவானி (3) என்ற மகளும் உள்ளனர்.
தற்போது வினோதினி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வினோதினி கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம்.
சம்பவத்தன்று வினோதினி மற்றும் தனது மகள்களை ஈஸ்வரன் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அவருக்கு சாப்பாடு கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் சாப்பிட மறுத்து விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ஈஸ்வரன் தனது அறைக்கு சென்று மர்ம உறுப்பை அறுத்துக் கொண்டார்.
மேலும் சேலையால் தனது கழுத்தை இறுக்கி மயங்கினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ஈஸ்வரன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அரசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X