search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பெண் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    தூத்துக்குடி பெண் கொலையில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    தூத்துக்குடி:

     தூத்துக்குடியை சேர்ந்த மாடசாமி மனைவி முனிலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்ட  வழக்கில் முத்தையாபுரம் ராஜூவ்நகரை சேர்ந்த கண்ணன் மற்றும் கோரம்பள்ளம் சோரீஸ்புரத்தை சேர்ந்த கோடாங்கி என்ற கோடா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கைவிடுத்தார்.  

    அதன்பேரில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி. பாலாஜி சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். 

    அவரது பரிந்துரையையேற்று கண்ணன் மற்றும் கோடாங்கி என்ற கோடா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 
    Next Story
    ×