search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம், ஈரோடு, கோவை வழியாக எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரெயில்

    சேலம், ஈரோடு, கோவை வழியாக எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    சேலம்:

    ரெயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம்  சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.  அதன்படி உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 

    கோரக்பூர்-எர்ணாகுளம் சிறப்பு ரெயில்(05303) வருகிற 30-ந் தேதி முதல் ஜூன் மாதம் 25 -ந் தேதி வரை சனிக்கிழமை தோறும் கோரக்பூர் ரெயில் நிலையத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு கான்பூர், நாக்பூர், வாராங்கல், விஜயவாடா, தெனாலி, நெல்லூர், கூடூர் ,பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திங்கட்கிழமை அதிகாலை 4.02 மணிக்கு சேலம் வந்தடையும்.

    பின்னர் சேலத்தில் இருந்து 4.05 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ,திருப்பூர், கோவை , பாலக்காடு, திருச்சூர், அலுவா வழியாக  மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். 

    இதேபோல் மறுமார்க்கத்தில் எர்ணாகுளம் கோரக்பூர் சிறப்பு ரெயில் (05304)  வருகிற மே மாதம் 2-ந் தேதி முதல் ஜூன் மாதம் 27-ந் தேதி வரை எர்ணாகுளம் ரெயில் நிலையத்திலிருந்து திங்கட்கிழமை தோறும்  இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு  அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.22 மணிக்கு சேலம் வந்தடையும்.

    பின்னர் சேலத்தில் இருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு  ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் , நெல்லூர், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், கான்பூர் வழியாக  வியாழக்கிழமை காலை 8.35 மணிக்கு கோரக்பூர் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×