search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கல்லூரி மாணவி கடத்தல் பெயிண்டர் மீது போலீசில் புகார்

    தாரமங்கலம் அருகிலுள்ள கல்லூரி மாணவி கடத்தல். பெயிண்டர் மீது போலீசில் புகார் செய்தனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் பூனையன் வளவு பகுதியை சேர்ந்த முருகன்-ராதா தம்பதியரின் மகள் மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வரும்போது பெயின்டிங் வேலை செய்து வரும் சிந்தாமணியூரை சேர்ந்த செல்வம் மகன் ராஜேந்திர பிரசாத் (25)  என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இந்நிலையில் ராஜேந்திர பிரசாத்  மாணவியை திருமண ஆசை வார்த்தை காட்டி கடத்தி சென்றுவிட்டதாக மாணவியின் தாய் ராதா தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ராஜேந்திர பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×