search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊர்வலம் நடந்தது.
    X
    ஊர்வலம் நடந்தது.

    புவிஈர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

    புவிஈர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    திருமங்கலம்,

    திருமங்கலத்தில் புவி ஈர்ப்பு தினத்தை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆன்மீக இயக்கத் தின் சார்பில் ஊர்வலம்  மதுரை மாவட்டம் திருமங் கலம் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆன்மிக இயக் கத்தின் சார்பில் புவியீர்ப்பு தினத்தை முன்னிட்டு ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம் நகர் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக  வழிபாட்டு மன்றங்கள் சார்பில் புவியீர்ப்பு தினத்தை முன்னிட்டு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் மாவட்ட தலைவர் அசோகன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    திருமங்கலம் ராஜாராம் தெருவில்  தொடங்கிய ஊர்வலம்  திருமங்கலம்& மதுரை சாலையில்  சியோன் நகர், மாயோன் நகர் வழியாக சென்று மறவன்குளம் பகுதியில் முடிவடைந்தது. 

    மறவன்குளம் கண்மாய் பகுதியில் புவியீர்ப்பு தினத்தை முன்னிட்டு 108 மரக்கன்றுகளை நட்டனர். இதனை  தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    Next Story
    ×