என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூடலூரில் நெல் கொள்முதல் நிலையம் கூடுதலாக அமைக்கக்கோரி விவசாயிகள் மறியல்
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு 2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு 1 இடத்தில் மட்டுமே கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெல்மணிகள் மழையில் நனைந்து ஈரமாக உள்ளது. எனவே கொள்முதல் நிலையங்களில் இவற்றை வாங்க மறுக்கின்றனர். இதனால் நெல்மணிகள் வீணாகி வருகின்றன.
எனவே கூடுதல் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனக்கோரி விவசாயிகள் கூடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்ததும் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அதிகாரிகள் வந்தால் தான் கலைந்து செல்வோம் எனக்கூறினர்.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையோரத்தில் விவசாயிகள் காத்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்