search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
    X
    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் - கலெக்டர் தகவல்

    தஞ்சையில் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நாளை நடைபெற உள்ளதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    தஞ்சை மாவட்டத்தில் தேசிய தொழில் பழகுனர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழில் பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம் தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை ) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. 

    இந்த முகாமில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள் , சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழில் பழகுனர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ. பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர். 

    மேலும் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் அப்ரென்டீசாக சேர்த்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் அரசாண்டு வரை தொழில் பழகுநர் பயிற்சியும் பெற்று தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

    இந்த தொழில் பழகுனர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000 முதல் நிறுவனத்தால் வழங்கப்படும். 

    இந்த சான்றிதழ் பெறுவது மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும்  அயல் நாடுகளிலும் பணிபுரிந்திட பயனுள்ளதாக அமையும்.

    மேலும் தகவல்களுக்கு தஞ்சை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், உதவி இயக்குனரை 04362-278222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×