என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மத்திய அரசு திட்ட வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
Byமாலை மலர்20 April 2022 10:29 AM GMT (Updated: 20 April 2022 10:29 AM GMT)
ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அந்தந்த பயனாளிகளே வீடுகளை கட்டிக்கொள்ள வேண்டும்.
அவிநாசி:
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு வீடு வசதி ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. மாநில அரசின் நிதி பங்களிப்புடன் குறைந்தபட்சம் 260 சதுர அடியில் வீடு கட்டிக்கொள்ள 1.70 லட்சம் ரூபாய், முழு சுகாதார திட்டத்தில் கழிப்பறை கட்ட 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அந்தந்த பயனாளிகளே வீடுகளை கட்டிக்கொள்ள வேண்டும். இதற்காக 90 நாளுக்கு 273 ரூபாய் வீதம் 24 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 2.06 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2018-2019 , 2019-2020ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பலரும் பல்வேறு காரணங்களால் வீடுகளை கட்டாமல் உள்ளனர்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களின் கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நிலுவையில் உள்ள வீடுகளை விரைவாக முடிக்க பயனாளிகளை அறிவுறுத்த வேண்டும் என திருப்பூர் ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X