என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
Byமாலை மலர்20 April 2022 10:25 AM GMT
ஒரு பள்ளியில் எல்.கே.ஜி., நுழைவு வகுப்பாக இருந்தால் அவ்வகுப்பில் மட்டுமே சேர்க்க முடியும்.
திருப்பூர்:
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் மெட்ரிக் பள்ளி கனவு நனவாக்கப்படுகிறது. இதன்கீழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விருப்பப்படும் தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்பிலிருந்து சேர்ந்து கொள்ளலாம்.
உதாரணமாக ஒரு பள்ளியில் எல்.கே.ஜி., நுழைவு வகுப்பாக இருந்தால் அவ்வகுப்பில் மட்டுமே சேர்க்க முடியும். 6-ம் வகுப்பு நுழைவு வகுப்பு எனில் 6-ம் வகுப்பில் சேர்க்க முடியும். அதன்பின், அனைத்து குழுந்தைகளுக்குமான முழு கல்வி கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.
மாணவர் சேர்க்கைக்கு, rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். மாணவர் சேர்க்கை இணையவழியில் இன்று தொடங்குகிறது. மே 18-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X