search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அச்சு பிணைக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தாசில்தார் தமிழரசியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
    X
    அச்சு பிணைக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தாசில்தார் தமிழரசியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

    குமாரபாளையத்தில் அச்சு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    குமாரபாளையத்தில் அச்சு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் அச்சு பிணைப்பு தொழிலா-ளர்கள் சங்க கூட்டியக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் வாரச்சந்தை முன்பு நடைபெற்றது. 

    இதில் கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகி-கள் பாலகிருஷ்ணன், செல்வராஜ், செல்வம், ராஜு, பசுபதி, சுரேஷ், தண்டபாணி, ஜெகதீஸ்வரன், கந்தசாமி, லோக-நா-தன் உள்பட பலர் பங்கேற்-றனர். 

    இந்த கோரிக்கை குறித்து தாசில்தார் தமிழரசி, மின்-வாரிய உதவி  சீனிவாசன், வட்டார போக்குவரத்து அலுவலக மேற்பார்-வையாளர் சக்திவேல்  ஆகியோரிடம் கோரிக்கைகள் குறித்து மனு வழங்கப்பட்டது.

    இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் கணேஷ்குமார், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட பொது செயலர் சுப்ஸ்பிரமணி  கூறியதாவது:- 
     மின்சாரத்துறை மூலம் விசைத்தறி   உரிமையாளர்-களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்-படுகிறது. பாவு பிணைப்-பதற்கு நாட்டிங் மெசின் செயல்பட இலவச மின்சாரம் தவறாக பயன்படுத்தப்-படுகிறது. இதனை நம்பி வாழ்ந்து வரும் அச்சு பிணைக்கும் தொழிலா-ளர்-கள் பெரும்பாலோர் வாழ்-வா-தாரம் பாதிக்கப்படு-கிறது. நாட்டிங் மெசின் கொண்டு வர காலாவதியான கார்களை கொண்டு வருகி-றார்கள். 

    இது போன்ற கார்--களை பறிமுதல் செய்ய வேண்டும் அச்சு பிணைப்-போர் வாழ்வாதாரம் காத்திட கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×