என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு
Byமாலை மலர்16 April 2022 5:53 AM GMT (Updated: 16 April 2022 5:53 AM GMT)
பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள ஆலாம்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக இருந்தது. இந்த நிலையில் திருச்செங்கோட்டில் இருந்து கோழி தீவனம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று மாற்றுப்பாதையில் செல்லாமல் ஆலாம்பாளையம் வழியாக வந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராத விதமாக அங்கிருந்த டிரான்ஸ்பார்மரை ஒட்டியுள்ள சேறும், சகதியுமான பள்ளத்தில் சிக்கியது.
பல நேரம் போராட்டத்துக்கு பின்னர் லாரி எந்திரம் மூலம் அங்கிருந்து வெளியே எடுக்கப்பட்டது. லாரி பள்ளத்தில் சிக்கியதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அந்த லாரி டிரான்ஸ்பார்மரில் கவிழ்ந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X