என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு பஸ்சில் பெண் தவறவிட்ட ரூ.5 ஆயிரம் ஒப்படைப்பு
Byமாலை மலர்15 April 2022 10:14 AM GMT (Updated: 15 April 2022 10:14 AM GMT)
நெல்லை வந்தபோது அரசு பஸ்சில் பெண் தவறவிட்ட ரூ. 5 ஆயிரத்தை போக்குவரத்து போலீஸ்காரர், டிரைவர் ஆகியோர் மீட்டு திரும்ப ஒப்படைத்தனர்.
நெல்லை:
மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (வயது 40). இவர் சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ்சில் வந்தார்.
வண்ணார்பேட்டை நிறுத்தத்தில் இறங்கிய போது தனது கைப்பையை காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். வெள்ளையம்மாள் தெரிவித்தார். மேலும் அதில் ரூ. 5 ஆயிரம், வீட்டு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களும் இருந்ததாக தெரிவித்தார்.
உடனே அங்கு நின்ற போலீசாரிடம் கூறினார். போக்குவரத்து தலைமை காவலர் மாரியப்பன், போக்கு-வரத்து கழக மேலாளரை தொடர்பு கொண்டு அரசு பஸ் டிரைவர் சின்னத்துரை என்பவரது செல்போன் எண்ணை வாங்கினார். பின்னர் அவரிடம் பேசி பஸ்சில் கைப்பை உள்ளதா? என கேட்டார்.
அப்போது வெள்ளையம்மாள் இருந்த இருக்கையில் அவரது கைப்பை இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதனை கைப்பற்றி வெள்ளையம்மாளிடம் ஒப்படைத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த வெள்ளையம்மாள் போலீஸ்காரர் மாரியப்பன், டிரைவர் சின்னத்துறைக்கு நன்றி கூறினார். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (வயது 40). இவர் சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ்சில் வந்தார்.
வண்ணார்பேட்டை நிறுத்தத்தில் இறங்கிய போது தனது கைப்பையை காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். வெள்ளையம்மாள் தெரிவித்தார். மேலும் அதில் ரூ. 5 ஆயிரம், வீட்டு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களும் இருந்ததாக தெரிவித்தார்.
உடனே அங்கு நின்ற போலீசாரிடம் கூறினார். போக்குவரத்து தலைமை காவலர் மாரியப்பன், போக்கு-வரத்து கழக மேலாளரை தொடர்பு கொண்டு அரசு பஸ் டிரைவர் சின்னத்துரை என்பவரது செல்போன் எண்ணை வாங்கினார். பின்னர் அவரிடம் பேசி பஸ்சில் கைப்பை உள்ளதா? என கேட்டார்.
அப்போது வெள்ளையம்மாள் இருந்த இருக்கையில் அவரது கைப்பை இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதனை கைப்பற்றி வெள்ளையம்மாளிடம் ஒப்படைத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த வெள்ளையம்மாள் போலீஸ்காரர் மாரியப்பன், டிரைவர் சின்னத்துறைக்கு நன்றி கூறினார். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X