என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
10,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு 3ம் திருப்புதல் தேர்வு
Byமாலை மலர்15 April 2022 7:27 AM GMT (Updated: 15 April 2022 7:27 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் 3-ம்-கட்ட தேர்வு 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளுக்கு தொடங்கியது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மூன்றாம் திருப்புதல் தேர்வு தொடங்கியது. நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வு மே மாதம் துவங்குகிறது. மாணவர்களை தயார்படுத்தும் விதமாக, குறைக்கப்பட்ட பாடங்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதில் சில மாவட்டங்களில் பாடங்கள் முடிக்காத காரணத்தால், மீதமுள்ள பாடப்பகுதிகளுக்கான, மூன்றாம் கட்ட திருப்புதல் தேர்வை பள்ளிகள் அளவிலேயே நடத்திக்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தியது.
இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் 3-ம் கட்ட தேர்வு 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தொடங்கியது. காலை 10மணி முதல் மதியம்1 மணி, மதியம் 2மணி முதல் மாலை 5 மணி என வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது.
இதற்கான, வினாத்தாள் மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ‘மெயில்’ மூலம் அனுப்பப்படுகிறது. பின் அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்கப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வருகிற 25-ந்தேதி முதல் செய்முறை தேர்வுகள் துவங்கப்பட உள்ள
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X