search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    10,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு 3ம் திருப்புதல் தேர்வு

    திருப்பூர் மாவட்டத்தில் 3-ம்-கட்ட தேர்வு 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளுக்கு தொடங்கியது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மூன்றாம் திருப்புதல் தேர்வு தொடங்கியது. நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வு மே மாதம் துவங்குகிறது. மாணவர்களை தயார்படுத்தும் விதமாக, குறைக்கப்பட்ட பாடங்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

    இதில் சில மாவட்டங்களில் பாடங்கள் முடிக்காத காரணத்தால், மீதமுள்ள பாடப்பகுதிகளுக்கான, மூன்றாம் கட்ட திருப்புதல் தேர்வை பள்ளிகள் அளவிலேயே நடத்திக்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தியது.

    இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் 3-ம் கட்ட தேர்வு 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தொடங்கியது. காலை 10மணி முதல் மதியம்1 மணி, மதியம் 2மணி முதல் மாலை 5 மணி என வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. 

    இதற்கான, வினாத்தாள் மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ‘மெயில்’ மூலம் அனுப்பப்படுகிறது. பின் அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்கப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வருகிற 25-ந்தேதி முதல் செய்முறை தேர்வுகள் துவங்கப்பட உள்ள
    Next Story
    ×