search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    குற்றாலம் அருவியில் குளிக்க வந்த வாலிபர் உயிரிழப்பு

    குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக வந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டன்குளம் பூந்தோட்ட காலனியை சேர்ந்தவர் விஜயபாண்டியன். இவரது மகன் குமார்(வயது 33). இவர் நேற்று இரவு நண்பர்களுடன் குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக வந்திருந்தார். இரவு ஐந்தருவியில் குளித்து முடித்துவிட்டு அங்குள்ள ஒரு ஆற்றுப்பகுதியில் கரையோரம் தூங்கி உள்ளார்.

    இன்று அதிகாலை கரையில் இருந்து தூக்கத்தில் உருண்டு கீழே விழுந்தார். இதில் காங்கிரீட்டில் தவறி விழுந்து அவர் தலையில் பலத்த காயத்துடன் இறந்தார். தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×