search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்ததானம் செய்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    ரத்ததானம் செய்தவர்களை படத்தில் காணலாம்.

    வாசுதேவநல்லூரில் ரத்த தான முகாம்

    வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது.

    எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம் மற்றும் குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் தமிழ்வீரன் முன்னிலை வகித்தார்.

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மாணவர்களிடம் இரத்த தானம் பெற்றனர். சங்கரன்கோவில் அரசு மருத்துவ அலுவலர் தேவி பிரபா கல்யாணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார், நம்பிக்கை மைய ஆற்றுநர் விஜயகுமார், சங்கரன்கோவில் சுகவாழ்வு மைய ஆற்றுநர் ராஜாமணி, சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் மருத்துவமனை செவிலியர்கள், ஆய்வக நுட்புணர்-கள் கலந்து கொண்டனர்.

    சுமார் 60 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ரத்த தான முகாம் ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஸ்ரீ ராம், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×