search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    பொதிகை ரெயில் கால அட்டவணை நாளை முதல் மாற்றம்

    பொதிகை ரெயில் கால அட்டவணையில் நாளை (14-ந்தேதி) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    செங்கோட்டை:

    பாண்டியன், வைகை, பொதிகை ரெயில் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யபட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி தற்போது சிலம்பு மற்றும் அந்தியோதயா விரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, அவற்றின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

     இதன் காரணமாக சென்னை செல்லும் பாண்டியன், வைகை விரைவு ரெயில்கள், செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரெயில் ஆகியவற்றின் கால அட்டவணையிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

    அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதல் மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரெயில் (12638) மதுரையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 9.35 மணிக்கு புறப்படும். 

    மேலும் இந்த ரெயில் கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 9.55, 10.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10, 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.05 மணிக்கு பதிலாக அதிகாலை 5.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

    சென்னை- செங்கோட்டை பொதிகை விரைவு ரெயில் (12661) நாளை முதல் திண்டுக்கல், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 3.10, 5.15, 5.35, 5.42, 5.58, காலை 6.12, 6.35, 6.48, 7.05, 7.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 3.05, 5.10, 5.30, 5.37, 5.53, காலை 6.07, 6.30, 6.43, 7, 7.30 மணிக்கு புறப்படும். 

    மேலும் இந்த ரெயில் வழக்கமான நேரமான காலை 8.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
    Next Story
    ×