search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    அ.தி.மு.க.வை யார் வழிநடத்த வேண்டும் என்பதை தொண்டர்கள் முடிவுசெய்வார்கள் - சசிகலா

    தாரமங்கலம் சென்ற சசிகலா, அரசியலில் இருந்து யாரையும் விரட்ட முடியாது என தெரிவித்தார்.
    ஈரோடு:

    சசிகலா சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணமாக காரில் சென்றார். நேற்று முன்தினம் நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் சென்றார்.

    இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் சென்றார். அங்கு சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:

    அ.தி.மு.க.வை யார் வழிநடத்த வேண்டும் என்பதை தொண்டர்கள் முடிவுசெய்வார்கள்.

    தொண்டர்கள் அளித்து வரும் பேராதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    புரட்சித் தலைவர் எம் ஜி ஆர், ஜெயலலிதா வழியில் மட்டும்தான் நான் செல்வேன்.

    எனக்கென தனி வழி எல்லாம் கிடையாது. என்னுடைய பணி மக்களுக்கானதுதான். நிச்சயமாக நான் அதை செய்வேன் என குறிப்பிட்டார்.

    Next Story
    ×