என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் 2 புதிய போலீஸ் நிலையங்கள் திறப்பு
Byமாலை மலர்12 April 2022 9:55 AM GMT (Updated: 12 April 2022 9:55 AM GMT)
புதிதாக கட்டப்பட்டு உள்ள நெல்லை ஐகிரவுண்டு போலீஸ் நிலையம் மற்றும் வி.கே.புரம் போலீஸ் நிலையம் ஆகியவற்றை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவக்-கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல்நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
பின்னர் போதிய வசதி இன்மையால் வேறு வாடகை கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது. இதற்கு புதிய போலீஸ் நிலையம் கேட்டு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்காக ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாளை மகாராஜநகர் ரவுண்டானா அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது அந்த பணிகள் முடிந்த நிலையில் இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.
புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல்-நிலையத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
காவல் நிலையம் திறக்கப்பட்டதும் மாநகர கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் சங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, ராமேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் புதிய காவல் நிலையத்தை பார்வையிட்டார். அங்குள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் அறை மற்றும் கைதிகளின் அறைகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அதனை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார். இதேபோல் அம்பையை அடுத்த வி.கே.புரம் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று காணொலி மூலமாக திறக்கப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவக்-கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல்நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
பின்னர் போதிய வசதி இன்மையால் வேறு வாடகை கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது. இதற்கு புதிய போலீஸ் நிலையம் கேட்டு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்காக ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாளை மகாராஜநகர் ரவுண்டானா அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது அந்த பணிகள் முடிந்த நிலையில் இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.
புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல்-நிலையத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
காவல் நிலையம் திறக்கப்பட்டதும் மாநகர கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் சங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, ராமேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் புதிய காவல் நிலையத்தை பார்வையிட்டார். அங்குள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் அறை மற்றும் கைதிகளின் அறைகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அதனை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார். இதேபோல் அம்பையை அடுத்த வி.கே.புரம் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று காணொலி மூலமாக திறக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X