search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக கண்காட்சி
    X
    புத்தக கண்காட்சி

    திருவள்ளூரில் 11 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு

    புத்தக கண்காட்சியில் 110 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில், இலக்கியம், மருத்துவம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை நூல்கள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என 1 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தும் முதல் புத்தக கண்காட்சி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த கண்காட்சியில் 110 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில், இலக்கியம், மருத்துவம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை நூல்கள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என 1 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த புத்தகங்களை பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவியர், குழந்தைகள் முதல் பெற்றோர் இதுவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான 5 லட்சம் புத்தகங்கள் வாங்கிச் சென்றுள்ளனர். இந்த புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.

    அதுமட்டுமல்லாமல் நாள்தோறும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் மற்றும் மாலை நேரங்களில், புகழ் பெற்ற பேச்சாளர்கள், கவிஞர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

    இந்த புத்தக கண்காட்சி 11-வது நாளான இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், பெரியவர்கள் புத்தக திருவிழாவில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
    Next Story
    ×