என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவள்ளூரில் 11 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு
Byமாலை மலர்11 April 2022 7:05 AM GMT (Updated: 11 April 2022 7:05 AM GMT)
புத்தக கண்காட்சியில் 110 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில், இலக்கியம், மருத்துவம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை நூல்கள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என 1 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தும் முதல் புத்தக கண்காட்சி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் 110 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில், இலக்கியம், மருத்துவம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை நூல்கள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என 1 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புத்தகங்களை பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவியர், குழந்தைகள் முதல் பெற்றோர் இதுவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான 5 லட்சம் புத்தகங்கள் வாங்கிச் சென்றுள்ளனர். இந்த புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் நாள்தோறும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் மற்றும் மாலை நேரங்களில், புகழ் பெற்ற பேச்சாளர்கள், கவிஞர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இந்த புத்தக கண்காட்சி 11-வது நாளான இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், பெரியவர்கள் புத்தக திருவிழாவில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தும் முதல் புத்தக கண்காட்சி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் 110 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில், இலக்கியம், மருத்துவம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை நூல்கள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என 1 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புத்தகங்களை பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவியர், குழந்தைகள் முதல் பெற்றோர் இதுவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான 5 லட்சம் புத்தகங்கள் வாங்கிச் சென்றுள்ளனர். இந்த புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் நாள்தோறும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் மற்றும் மாலை நேரங்களில், புகழ் பெற்ற பேச்சாளர்கள், கவிஞர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இந்த புத்தக கண்காட்சி 11-வது நாளான இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், பெரியவர்கள் புத்தக திருவிழாவில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X