search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வேடசந்தூர் அருகே சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் பரிதாப சாவு

    வேடசந்தூர் அருகே சாலையோரம் மயங்கி கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே அழகாபுரியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையோரம் மயங்கி கிடந்தார். பாலப்பட்டி வி.ஏ.ஓ. சாந்தி இது குறித்து கூம்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    முதியவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிழந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவுப்படி சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கூம்பூர் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் காவலர் திருப்பதி ஆகியோர் முதியவர் உடலை அடக்கம் செய்தனர்.
    Next Story
    ×