search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் கல்லூரிக்கு செல்ல முடியாத விரக்தியில் மாணவி தற்கொலை

    கடந்த 1மாதங்களாக துடியலூர் ரோட்டில் உள்ள பார்மஸியில் வேலை பார்த்தார்.
    கோவை: 

    கோவை சரவணம்பட்டி ஜே.ஜே நகரை சேர்ந்தவர் கீர்த்தி(வயது24). கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார். சமீபத்தில் கீர்த்திக்கு கொரோனா   தொற்று ஏற்பட்டது. 

    அவரது பெற்றோர் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அதன்பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவரால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை என தெரிகிறது. 

    இதனையடுத்து கடந்த 1மாதங்களாக துடியலூர் ரோட்டில் உள்ள பார்மஸியில் வேலை பார்த்தார். கொரோனா பாதித்ததாலும்,  கல்லூரி படிப்பு பாதியில் முடிந்ததாலும் கீர்த்தி மிகுந்த மனவேதனை அடைந்தார்.

    இதனால் வாழ்க்கையில்  விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×