என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுரண்டையில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்8 April 2022 9:29 AM GMT (Updated: 8 April 2022 9:29 AM GMT)
சுரண்டை அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
சுரண்டை அருகே உள்ள வாடியூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ராமலெட்சுமி. இவர்களுக்கு இன்பரசன்(வயது 16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பெரியசாமி பஞ்சாபில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ராமலெட்சுமி மற்றும் அவரது குழந்தைகள் மட்டும் வாடியூரில் வசித்து வருகின்றனர். இன்பரசன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு செல்-லாமல் வீட்டில் இருந்த இன்பரசன், படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சுரண்டை போலீசார் அங்கு விரைந்து வந்து இன்பரசன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்வதற்கு தனக்கு விருப்பம் இல்லை. நான் போக மாட்டேன் என்று இன்பரசன் கூறி உள்ளார்.
ஆனாலும் ராமலெட்சுமி, தனது மகனை பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுரண்டை அருகே உள்ள வாடியூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ராமலெட்சுமி. இவர்களுக்கு இன்பரசன்(வயது 16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பெரியசாமி பஞ்சாபில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ராமலெட்சுமி மற்றும் அவரது குழந்தைகள் மட்டும் வாடியூரில் வசித்து வருகின்றனர். இன்பரசன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு செல்-லாமல் வீட்டில் இருந்த இன்பரசன், படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சுரண்டை போலீசார் அங்கு விரைந்து வந்து இன்பரசன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்வதற்கு தனக்கு விருப்பம் இல்லை. நான் போக மாட்டேன் என்று இன்பரசன் கூறி உள்ளார்.
ஆனாலும் ராமலெட்சுமி, தனது மகனை பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X