search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    ராணி அண்ணா கல்லூரியில் 8-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

    பேட்டை ராணிஅண்ணா கல்லூரியில் வருகிற 8-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    நெல்லை:

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 8-ந் தேதி  (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு பேட்டை ராணிஅண்ணா மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. 

    முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. 

    தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.

    முகாமில்  கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். 

    வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegrame Chennal- ல் இணைந்து பயன்பெறலாம். 

     மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

    இத்தகவலைநெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×