search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    தி.மு.க. பிரமுகர் கொலையில் மேலும் ஒருவர் கைது

    செங்கல்பட்டு கோர்ட்டில் பதுங்கி இருந்த மற்றொருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 59). தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று முன்தினம் காலை பிராட்வே பஸ் நிலையத்தில் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான கணேஷ், அவரது மகன் உள்பட 5 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதற்கிடையே செங்கல்பட்டு கோர்ட்டில் பதுங்கி இருந்த மற்றொருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×