search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
    X
    காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

    சாந்திநகரில் காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்- சாக்கடை கலந்த குடிநீர் வருவதாக புகார்

    சாந்திநகரில் காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்பகுதியில் சாக்கடை கலந்த குடிநீர் வருவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
    நெல்லை:

    பாளை சாந்திநகர் 6,7-வது வார்டுக்கு உட்பட்ட 10 தெருக்களில் வசிக்கும் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் இன்று மணிக்கூண்டு பகுதியில் காலிக்குடங்களுடன் திரண்டனர்.

    அவர்கள் தங்கள் பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    சம்பவ இடத்துக்கு பாளை சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் 6-வது வார்டு கவுன்சிலர் பவுன்ராஜ், 7-வது வார்டு கவுன்சிலர் இந்திரா ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட் டவர்களுடன் பேச்சு வார்த் தை நடத்தினர். அப்போது பெண்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதிக்கு கடந்த சில வருடங்களாகவே சாக்கடை கலந்த குடிநீர் தான் வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்துள்ளோம்.

    ஆனாலும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் இருவரும் மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் பேசினர். பின்னர் அவர்கள் பொது மக்களிடம், மிக விரைவில் சுத்தமான குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக் கைகள் எடுக்கப் படும் என உறுதியளித்தனர்.

    அதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    Next Story
    ×