search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழாவில் பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகை
    X
    கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழாவில் பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகை

    பட்டமளிப்பு விழா

    கீழக்கரை இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
    கீழக்கரை

    கீழக்கரை தெற்கு தெருவில் அமைந்துள்ள இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மழலை யருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. 

    ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல். ஏ., தலைமை தாங்கி பேசினார். பள்ளி தாளாளர் எம். எம்.கே.முகைதீன் இப்ராகிம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப் பாளர்களாக மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) குணசேகரன், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ண மூர்த்தி, கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், 8வது வார்டு கவுன்சிலர் எம்.எம்.கே. முகம்மது காசிம் மரைக்கார், 1வது வார்டு கவுன்சிலர் பாதுஷா, 19வது வார்டு கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ், ராமநாத புரம் அரசு வழக்கறிஞர் மனோகரன், ராமநாதபுரம் அண்ணாமலை டிரான்ஸ் போர்ட் உரிமையாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    முன்னதாக 8ம் வகுப்பு மாணவர் முகம்மது அலி கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். யு.கே.ஜி. மாணவி லியா வரவேற்றார். யு.கே.ஜி. மாணவி மஹ்தூம் சிபாரா பட்டமளிப்பு உரை நிகழ்த் தினார். 8ம் வகுப்பு மாணவிகள் ஷஹீது ஆயிஷா, ஆமினா ருஸ்தா நிகழ்ச்சி தொகுப்புரை ஆற்றினர். அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

    முடிவில் எல்.கே.ஜி. மாணவர் சயீப் அப்துல்லா நன்றி கூறினார். 

    பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், தலைமையாசிரியை லினி மோல் மற்றும் ஆசிரியைகள் நவ்ஸ்£த் பேகம், அஸ்மத் நஸிஹா, சாரதா ஆகியோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
    Next Story
    ×