search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.

    மு.க.ஸ்டாலினிடம் நீண்டநாள் கோரிக்கைகளை மனுவாக அளித்த விஜய் வசந்த்

    குமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விஜய் வசந்த் எம்.பி. மனுவாக அளித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. சந்தித்து நீண்ட நாள் கோரிக்கைகளை மனுவாக அளித்தார்.

    அதில், தூண்டில் வளைவு மற்றும் கடல் சுவர் அமைக்கும் பணிகளை பருவமழை தாக்குவதற்கு முன் பூர்த்தி செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க நிலத்தை ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விஜய் வசந்த் எம்.பி. மனுவாக அளித்துள்ளார்.
    Next Story
    ×