என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் 100 சதவீதம் வரி வசூல்
Byமாலை மலர்1 April 2022 9:51 AM GMT (Updated: 1 April 2022 9:51 AM GMT)
தமிழகத்தில் முதல் நகராட்சியாக 100 சதவீதம் வரிவசூல் முடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சியின் நடப்பு ஆண்டுக்கான 2021-22ல் சொத்துவரி, குடிநீர் கட்டணம், வணிக வளாக வரி, தொழில் வரி, காலியிட வரி மற்றும் இதர வரியினங்கள் மூலம் அனைத்து வரிகளையும் வசூல் செய்து முடித்துள்ளனர்.
இது குறித்து வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன் குமார், நகராட்சி தலைவர் கனியரசி ஆகியோர் கூறுகையில், நகராட்சிக்கு வரிகள் மூலம் ரூ. 3 கோடியே 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் நகர மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தமிழகத்தில் முதல் நகராட்சியாக 100 சதவீதம் வரிவசூல் முடிக்கப்பட்டுள்ளது என்றனர்.
முழுமையாக வரி வசூல் செய்து முதலிடம் பிடித்தமைக்காக பில் கலெக்டர், அனைத்து பணியாளர்கள், குடிநீர் வசூல் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மற்றும் தலைவர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X