search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ரேஷன் அரிசி
    X
    வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ரேஷன் அரிசி

    ஜோலார்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திந்த 1.7 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    ஜோலார்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திந்த 1.7 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் ஒருவரது வீட்டில் ரேசன் அரிசி கள்ளத்தனமாக பதுக்கி வைத்து அதனை வெளி மாநிலத்திற்கு கடத்த வைத்து இருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமையில் வருவாய்த்துறையினர், பறக்கும் படை தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் ஆகியோர் தாமலேரிமுத்தூர் காலனி பகுதியில் வீடு வீடாக சென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஒருவரது வீட்டில் ரேசன் அரிசி 34 மூட்டைகளில் 1.7 டன் அரிசி பதுக்கி வைத்தது இருந்தது தெரியவந்தது.

    மேலும் அந்த வீட்டில் இருந்த நபர் சோதனை செய்யும் போது தப்பி ஓடி விட்டார் இதனையெடுத்து அதனைப் பறிமுதல் செய்து திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் அந்த வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×