search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலியான வாலிபர்கள்.
    X
    பலியான வாலிபர்கள்.

    மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் பலி

    பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்த 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் தினேஷ் (வயது 23). இவரது நண்பர் அதேபோல் மகிழங் கோட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் மகன் தேவமணி (22).

    இருவரும் கோட்டக்குடி அய்யனார் கோவில் அருகில் சேதுபாவாசத்திரத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி தினேஷுக்கு சொந்தமான அதிநவீன மோட்டார் சைக்கிளில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயமடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். வீரமணி படுகாயங் களுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேரின் உடல்களும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×