search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரசார ஊர்தி மூலம் திட்ட விளக்கம் அளிக்கப்பட்ட போது எடுத்தபடம்.
    X
    பிரசார ஊர்தி மூலம் திட்ட விளக்கம் அளிக்கப்பட்ட போது எடுத்தபடம்.

    தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிரசார ஊர்தி மூலம் திட்ட விளக்கம்

    தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிரசார ஊர்தி மூலம் திட்ட விளக்கம் அளிக்கப்பட்டது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மூலம் ஊட்டமிகு சிறுதானியங்கள் பிரசார ஊர்தி மூலம் திட்ட விளக்கம் அளிக்கப்பட்டது.

    பரமத்தி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையில் இப்பிரச்சார ஊர்தியின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்து தொடங்கி வைத்தார். 

    இந்த பிரசார ஊர்தி மூலம் பரமத்தி வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் சென்று தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (ஊட்டமிகு சிறுதானியங்கள்) உள்ள மானிய விபரங்கள் மற்றும் சிறுதானிய உணவின் நன்மைகள் பற்றி விளக்கமாக எடுத்து கூறப்பட்டது. 

    Next Story
    ×