என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கயத்தாறு அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி
Byமாலை மலர்31 March 2022 6:56 AM GMT (Updated: 31 March 2022 6:56 AM GMT)
கயத்தாறு அருகே உள்ள குளத்தில் விவசாயி மூழ்கி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய பால் (வயது 55). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் நெற்பயிர்கள் நட்டிருந்தார். தற்போது அவை அறுவடைக்கு தயாராக உள்ளது.அங்கு இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
இதனால் நெற்பயிருக்கு காவலுக்காக நேற்று இரவு ஜெயபால் வயலுக்கு சென்றார். அப்போது அருகில் உள்ள குளத்தில் தனது சாரம், சட்டை, செருப்புக்களை கழற்றி கரையில் வைத்து விட்டு குளத்துக்குள் இறங்கி மீன் பிடிக்க சென்றதாக தெரிகிறது.
அப்போது ஆழமான இடத்திற்கு சென்ற ஜெயபால் வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறி குளத்திற்குள் இறந்து கிடந்தார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் வயலுக்கு வந்து அவரை காணவில்லை.
அங்கு தேடி பார்த்தனர். அதிகாலை 1 மணி அளவில் கிராம மக்கள் திரண்டு அங்குள்ள குளத்தில் தேடி பார்த்தனர். அங்கு பிணமாக ஜெயபால் உடலை மீட்டனர்.
இதுகுறித்து நாரைக்கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஜெயபாலுக்கு யாகம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
கயத்தாறு தாலுகா வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய பால் (வயது 55). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் நெற்பயிர்கள் நட்டிருந்தார். தற்போது அவை அறுவடைக்கு தயாராக உள்ளது.அங்கு இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
இதனால் நெற்பயிருக்கு காவலுக்காக நேற்று இரவு ஜெயபால் வயலுக்கு சென்றார். அப்போது அருகில் உள்ள குளத்தில் தனது சாரம், சட்டை, செருப்புக்களை கழற்றி கரையில் வைத்து விட்டு குளத்துக்குள் இறங்கி மீன் பிடிக்க சென்றதாக தெரிகிறது.
அப்போது ஆழமான இடத்திற்கு சென்ற ஜெயபால் வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறி குளத்திற்குள் இறந்து கிடந்தார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் வயலுக்கு வந்து அவரை காணவில்லை.
அங்கு தேடி பார்த்தனர். அதிகாலை 1 மணி அளவில் கிராம மக்கள் திரண்டு அங்குள்ள குளத்தில் தேடி பார்த்தனர். அங்கு பிணமாக ஜெயபால் உடலை மீட்டனர்.
இதுகுறித்து நாரைக்கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஜெயபாலுக்கு யாகம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X