என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முகத்தில் தீக்காயங்களுடன் வாலிபர் பிணம்
Byமாலை மலர்29 March 2022 9:33 AM GMT (Updated: 29 March 2022 9:33 AM GMT)
பட்டுக்கோட்டை அருகே முகத்தில் தீக்காயங்களுடன் கிடந்த வாலிபர் பிணம் கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 32). இவர் திருமணம் ஆகாத நிலையில் தன் தாயாருடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இவர் வீட்டுக்கு வராமல் இருந்து வந்தார். நண்பர்களையும் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நடுவிக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே முருகானந்தம் முகப் பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து வாட்டாத்திக் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்வதற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முருகானந்தத்தின் முகப் பகுதியில் தீக்காயம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 32). இவர் திருமணம் ஆகாத நிலையில் தன் தாயாருடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இவர் வீட்டுக்கு வராமல் இருந்து வந்தார். நண்பர்களையும் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நடுவிக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே முருகானந்தம் முகப் பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து வாட்டாத்திக் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்வதற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முருகானந்தத்தின் முகப் பகுதியில் தீக்காயம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X