search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேகம் நடந்தது.
    X
    கும்பாபிஷேகம் நடந்தது.

    4 கோவில்களில் கும்பாபிஷேகம்

    திருப்பனந்தாள் அருகே 4 கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே கோணுளாம்பள்ளம் திட்டச்சேரி விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளிட்ட 4 கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    கோணுளாம்பள்ளம் அருகே திட்டச்சேரி கிராமத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் வேப்பணார் என்கிற அய்யனார் கோயில், மகா மாரியம்மன் கோயில், உருத்தி ராபதீஸ்வரர் கோயில் திருப்பணிகள் அதிக பொருட்செலவில் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை சதுர் வேத பாராயணம், தேவார பாராயணத்துடன் 4ம் கால யாகசாலை பூஜை பூர்ணாகுதியை தொடர்ந்து கடம் புறப்பாடு மங்கள வாத்தியம் முழங்க நடந்தது. 

    முதலில் வேப்பணார் கோயில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாமாரியம்மன் கோயில், உத்திராபதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் காலை 10 மணிக்கு காசி விசுவநாதர் விசாலாட்சி உள்ளிட்ட அனைத்து சன்னதி விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மதியம் ஐதீக முறைப்படி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் கோணுளாம்பள்ளம், திட்டச்சேரி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு விஸ்வநாத சுவாமி கோயில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், அய்யனார், மகாமாரியம்மன், உத்திராபதீஸ்வரர் உள்ளிட்ட கிராம தேவதை வீதிஉலா காட்சி நடந்தது. ஏற்பாடுகளை திட்டச்சேரி கிராமவாசிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இன்று முதல் கோயில்களில் மண்டல பூஜைகள் தொடங்கி நடக்கிறது.

    Next Story
    ×