என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பப்பாளி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி
Byமாலை மலர்28 March 2022 10:29 AM GMT (Updated: 28 March 2022 10:29 AM GMT)
தண்ணீர் தேவை குறைவு, குறைவான பராமரிப்பு போன்றவைகளால் பப்பாளி விவசாயத்தில் பல்லடம் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் பகுதியில், பப்பாளி விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைவு. வைட்டமின் ஏ அதிகம் உள்ள பப்பாளிபழம், வெப்பமான நிலப்பரப்பில் அதிக அளவில் வளர்கிறது.இந்த நிலையில்தண்ணீர் தேவை குறைவு, குறைவான பராமரிப்பு போன்றவைகளால் பப்பாளி விவசாயத்தில் பல்லடம் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பப்பாளியில் ரெட்லேடி, ஜிண்டா என இருவகைகள் உண்டு .ரெட்லேடி பழத்திற்காகவும், ஜிண்டா பப்பாளிப் பால் உற்பத்திக்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் பல்லடம் பகுதியில் விவசாயிகள் ரெட்லேடி பப்பாளி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து பல்லடம் அருகே உள்ள காளிநாதம்பாளையத்தை சேர்ந்த பூலக்காடு தோட்டம் சாமிநாதன் என்ற விவசாயி கூறியதாவது:-
கடந்த 5 வருடமாக பப்பாளி விவசாயம் செய்து வருகிறோம். தண்ணீர் தேவை குறைவு,பராமரிப்பு செலவு குறைவு என்பதால் விவசாயிகள் பப்பாளி விவசாயம் செய்கிறோம். 1 ஏக்கருக்கு 900 பப்பாளி நாற்றுகள் நடலாம், நாற்று நட்ட 6 மாதத்தில் இருந்து பப்பாளி பழம் அறுவடை செய்யலாம்.
வாரந்தோறும் ஏக்கருக்கு சுமார் 4 டன் வரை விளைச்சல் இருக்கும். 2 ஆண்டுகள் வரை பப்பாளி பழம் அறுவடை செய்யலாம். பின்னர் பப்பாளி மரம் அதிக உயரம் வளர்ந்து விடுவதால், பறிக்க முடியாத நிலை ஏற்படும் அதனால் 2 வருடங்களுக்கு பப்பாளி விளைச்சல் எடுத்துவிட்டு மீண்டும் அவற்றை அழித்து புதிய நாற்றுகள் நட்டு விடுவோம்.
மிதமான சூழ்நிலை இருந்தால் பப்பாளி அதிக விளைச்சல் கொடுக்கும். தற்போது கோடைகாலம் என்பதால் பப்பாளி பூக்கள் வெயிலில் கருகி விழுந்து விடுகின்றன. இதனால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் நிறைய விவசாயிகள் பப்பாளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்போது வரத்து அதிகம் உள்ளது.
சென்ற மாதத்தில் கிலோ 20 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி சென்றனர் .தற்பொழுது 12 முதல் 15 ரூபாய் வரைதான் வியாபாரிகள் வாங்குகின்றனர். இருந்தபோதிலும் மற்ற பயிர்களை காட்டிலும் பப்பாளி விவசாயம் மோசமில்லை .இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பல்லடம் பகுதியில், பப்பாளி விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைவு. வைட்டமின் ஏ அதிகம் உள்ள பப்பாளிபழம், வெப்பமான நிலப்பரப்பில் அதிக அளவில் வளர்கிறது.இந்த நிலையில்தண்ணீர் தேவை குறைவு, குறைவான பராமரிப்பு போன்றவைகளால் பப்பாளி விவசாயத்தில் பல்லடம் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பப்பாளியில் ரெட்லேடி, ஜிண்டா என இருவகைகள் உண்டு .ரெட்லேடி பழத்திற்காகவும், ஜிண்டா பப்பாளிப் பால் உற்பத்திக்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் பல்லடம் பகுதியில் விவசாயிகள் ரெட்லேடி பப்பாளி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து பல்லடம் அருகே உள்ள காளிநாதம்பாளையத்தை சேர்ந்த பூலக்காடு தோட்டம் சாமிநாதன் என்ற விவசாயி கூறியதாவது:-
கடந்த 5 வருடமாக பப்பாளி விவசாயம் செய்து வருகிறோம். தண்ணீர் தேவை குறைவு,பராமரிப்பு செலவு குறைவு என்பதால் விவசாயிகள் பப்பாளி விவசாயம் செய்கிறோம். 1 ஏக்கருக்கு 900 பப்பாளி நாற்றுகள் நடலாம், நாற்று நட்ட 6 மாதத்தில் இருந்து பப்பாளி பழம் அறுவடை செய்யலாம்.
வாரந்தோறும் ஏக்கருக்கு சுமார் 4 டன் வரை விளைச்சல் இருக்கும். 2 ஆண்டுகள் வரை பப்பாளி பழம் அறுவடை செய்யலாம். பின்னர் பப்பாளி மரம் அதிக உயரம் வளர்ந்து விடுவதால், பறிக்க முடியாத நிலை ஏற்படும் அதனால் 2 வருடங்களுக்கு பப்பாளி விளைச்சல் எடுத்துவிட்டு மீண்டும் அவற்றை அழித்து புதிய நாற்றுகள் நட்டு விடுவோம்.
மிதமான சூழ்நிலை இருந்தால் பப்பாளி அதிக விளைச்சல் கொடுக்கும். தற்போது கோடைகாலம் என்பதால் பப்பாளி பூக்கள் வெயிலில் கருகி விழுந்து விடுகின்றன. இதனால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் நிறைய விவசாயிகள் பப்பாளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்போது வரத்து அதிகம் உள்ளது.
சென்ற மாதத்தில் கிலோ 20 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி சென்றனர் .தற்பொழுது 12 முதல் 15 ரூபாய் வரைதான் வியாபாரிகள் வாங்குகின்றனர். இருந்தபோதிலும் மற்ற பயிர்களை காட்டிலும் பப்பாளி விவசாயம் மோசமில்லை .இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X